அடிமைகள்..
யார் அடிமைகள்?
உயர்ந்த மதிப்பெண் பெற்றும் உத்தியோகம் பெறமுடியாத நிலை,
கேட்க நாதி இல்லை,நாம் தான் அடிமைகள்...
முறைத்தாலும் வன்கொடுமை என சொல்லி சிறை தள்ளும் நிலை,
கேட்க நாதி இல்லை,நாம் தான் அடிமைகள்...
சட்டம் நம் கையில் இல்லாததால் சட்டக்கல்லூரியில் அடிபட்டோம்,
கேட்க நாதி இல்லை,நாம் தான் அடிமைகள்...
அன்று யாரோ சொன்னதாய் கேள்வி பட்டேன்,
ஆடுகளாய் இருப்பதால் தானே பலியிடபடுகிறாய்,சிங்கங்களாய் மாறு என்று...
இன்று நான் கேட்கிறேன்,என்
ஆடுகள் சிங்கமாய் முயலும்போது,
சிங்கமே நீ ஏன் ஆடாய் மாற முயல்கிறாய்???
உன்னை ஒன்றுபடுத்துவேன்,கற்பிப்பேன்,
ஜெய் ஹிந்த்
No comments:
Post a Comment